குற்றமென்பது யாதெனில்? - 1
குற்றமென்பது யாதெனில்? அத்தியாயம் 1 அரங்கம் அதிரும் கரகோஷங்கள் நடுவே நிமிர்ந்த நன்னடையுடன் மேடை ஏறியவன், அங்கே நின்றிருந்த உயர் காவல் அதிகாரி முன் சலியுட் அடித்து விரைப்பாக வந்து நின்றான் இளம் காவல் ஆய்வாளன் கர்ணன். நேர் கொண்ட பார்வை அவன் பயமறியான் என்பதை பறைசாற்றிட, நெஞ்சுறைந்த திண்ணம் அவன் ஊழலுக்கு அடிபணியான் என்பதையும் உரக்க சொன்னது. பல காக்கி சட்டைகள் மத்தியில் அவன் மட்டும் இன்று உயர்ந்து நிற்க அவன் நேர்மையும் கூட காரணம் தானே. கர்ணன் இளம் காவல் ஆய்வாளன். பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் தான் ஆகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பாக பணி புரிந்து வருகிறான். இதுவரை அவன் நிலையத்திற்கு வந்த அனைத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்டு அனைத்தையும் முடித்து வைத்துள்ளான் என்பதற்காக அவனது உயர் அதிகாரிகள் கொடுக்கும் சிறிய பாராட்டு விழா தான் இது. பாராட்டு விழா முடிந்ததும் அன்று இரவு, அவனது வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான். மாலை அவனது வீட்டிற்கு சக பணியாளர்களும், சேம் பேச் ஃப்ரெண்ட்ஸும், நெருங்கிய நண்பர்களும் வந்திருந்தனர். கர்ணன்