Posts

Showing posts from June, 2024

குற்றமென்பது யாதெனில்? - 1

Image
   குற்றமென்பது யாதெனில்? அத்தியாயம் 1 அரங்கம் அதிரும் கரகோஷங்கள் நடுவே நிமிர்ந்த நன்னடையுடன் மேடை ஏறியவன், அங்கே நின்றிருந்த உயர் காவல் அதிகாரி முன் சலியுட் அடித்து விரைப்பாக வந்து நின்றான் இளம் காவல் ஆய்வாளன் கர்ணன். நேர் கொண்ட பார்வை அவன் பயமறியான் என்பதை பறைசாற்றிட, நெஞ்சுறைந்த திண்ணம் அவன் ஊழலுக்கு அடிபணியான் என்பதையும் உரக்க சொன்னது. பல காக்கி சட்டைகள் மத்தியில் அவன் மட்டும் இன்று உயர்ந்து நிற்க அவன் நேர்மையும் கூட காரணம் தானே. கர்ணன் இளம் காவல் ஆய்வாளன். பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் தான் ஆகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பாக பணி புரிந்து வருகிறான். இதுவரை அவன் நிலையத்திற்கு வந்த அனைத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்டு அனைத்தையும் முடித்து வைத்துள்ளான் என்பதற்காக அவனது உயர் அதிகாரிகள் கொடுக்கும் சிறிய பாராட்டு விழா தான் இது.   பாராட்டு விழா முடிந்ததும் அன்று இரவு, அவனது  வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான். மாலை அவனது வீட்டிற்கு சக பணியாளர்களும்,  சேம் பேச் ஃப்ரெண்ட்ஸும், நெருங்கிய நண்பர்களும் வந்திருந்தனர். கர்ணன்

அதிரல் தாங்கும் பாதிரி எக்ஸட்ரா

Image
  எக்ஸ்ட்ரா  ஐந்து வருடங்களுக்கு பிறகு. அன்று செண்பகவள்ளிக்கு வளைகாப்பு.  திருமனமண்டபத்தில் எல்லாரும் கூடி இருக்க, நடுநாயகமாக போடப்பட்டிருந்த ஒற்றை மெது மெது சோபாவில் தன் ஏழு மாத கருவை சுமந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் செண்பகவள்ளி. அவளே குழந்தை புள்ள, அவளுக்கு ஒரு குழந்தையா? என்று தான் எண்ண தோன்றியது அவள் உருவம். மனதில் முதிர்வு இல்லாமல் முகம் மட்டும் வயதின் முதிர்வை பிரதி பலிக்குமா என்ன? என்றும் அவள் விக்ரமின் குழந்தை தான் போலும். மேடையில் அவள் அருகே சத்யன் அமர்ந்திருக்க, இருவருக்கும் சேர்த்து நலங்கு வைத்துக் கொண்டே, செண்பகா கையில் வளையல் அணிந்து சென்றார்கள் பெண்கள் அனைவரும். சிறிது நேரம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அமைதியாக இருந்த செண்பகாவோ, மெதுவாக சத்யன் தோளை சுரண்டிட, அவனும் “என்ன மா? ஏதாவது வேணுமா?” என்று அத்தனை அக்கறையாக கேட்டான். கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு ஏதேனும் உடல் உபாதையோ? ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதில் ஏதும் சிரமமோ? என்று அக்கறையாக அவன் கேட்டிட, “ஆமா வேணும்” என்று வேகமாக தலையை ஆட்டியவள் சீர் வரிசை தட்டில் வைத்திருந்த லட்டுகளை கண்களால் காட்டி இளித்திட