குற்றமென்பது யாதெனில்? - 11
அத்தியாயம் 11 வழக்கு மோசமாய் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு பெண்கள் கை, கால்களை இழந்து உள்ளனர். இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. குற்றவாளியை பற்றி எந்த தடையமும் இதுவரை கிடைக்கவில்லை. குற்றவாளி ஒருவரா? இல்லை கூட்டு குற்றவாளிகளா? என எதுவும் தெரியவில்லை. கிடைத்த தடைகளை வைத்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்றாலும் கிடைத்த தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. குற்றவாளி உடல் ஊனமுற்றவராக இருந்தால், உடல் வலிமை அற்றவராக இருந்தால், கை, கால்கள் வெட்டப்பட்ட இடத்தில் மிக நேர்த்தியாக ஒரே வீற்றில் வெட்டப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது அவர் மிகுந்த வலிமை மிக்கவராக இருக்க வேண்டும். இரண்டு ஆண்களை கடத்தி சென்றுள்ளார். ஒரு மாற்றுத்திறனாளி அவ்வாறு செய்வது கடினம் என அனைத்தும் முன்னுக்குப் பின்பாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை கர்ணனுக்கு. மேலும் சில நாட்கள் கழித்து காவலர் ஒருவர் கர்ணனிடம் வந்து, நமது நிலைய தொலைபேசிக்கு நமது நிலையை ஆய்வாளர் மனைவி அவர்கள் தொடர்புகொண்டு பேசினார்கள். அவரது கணவர் விடும