குற்றமென்பது யாதெனில்? - 11

 




அத்தியாயம் 11



வழக்கு மோசமாய் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு பெண்கள் கை, கால்களை இழந்து உள்ளனர். இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள். 


மேலும் இருவர் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. 


குற்றவாளியை பற்றி எந்த தடையமும் இதுவரை கிடைக்கவில்லை. 


குற்றவாளி ஒருவரா? இல்லை கூட்டு குற்றவாளிகளா? என எதுவும் தெரியவில்லை. கிடைத்த தடைகளை வைத்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்றாலும் கிடைத்த தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. 


குற்றவாளி உடல் ஊனமுற்றவராக இருந்தால், உடல் வலிமை அற்றவராக இருந்தால், கை, கால்கள் வெட்டப்பட்ட இடத்தில் மிக நேர்த்தியாக ஒரே வீற்றில் வெட்டப்பட்டுள்ளது. 


இதை வைத்து பார்க்கும் போது அவர் மிகுந்த வலிமை மிக்கவராக இருக்க வேண்டும். இரண்டு ஆண்களை கடத்தி சென்றுள்ளார். 


ஒரு மாற்றுத்திறனாளி அவ்வாறு செய்வது  கடினம் என அனைத்தும் முன்னுக்குப் பின்பாக உள்ளது. 


என்ன செய்வது என்று தெரியவில்லை கர்ணனுக்கு.

          

மேலும் சில நாட்கள் கழித்து காவலர் ஒருவர் கர்ணனிடம் வந்து,


நமது நிலைய தொலைபேசிக்கு நமது நிலையை ஆய்வாளர் மனைவி அவர்கள் தொடர்புகொண்டு பேசினார்கள். 


அவரது கணவர் விடுமுறை முடித்து பணிக்கு வந்த பிறகு இதுவரை வீட்டை தொடர்பு கொள்ளவே இல்லையாம். என்ன ஆனது? என கேட்க அழைத்திருந்தார்.” என்று அவர் சொல்ல,


“நீங்கள் அவர்களிடம் ஏதேனும் கூறினீர்களா?” என கர்ணன்  கேட்டான். 


அதற்கு அந்த காவலாளி “ஐயா வந்தவுடன் நீங்கள் கூறிய தகவலை சொல்கிறேன் அம்மா” என கூறினேன் என்றான். 


அப்பொழுதுதான் நிலையத்தில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கு ஒரே சந்தேகம் தோன்றியது.


‘ஒருவேளை நமது நிலையை ஆய்வாளரும் கடத்தப்பட்லுள்ளாரா?’ என இதைப்பற்றி கர்ணன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தான். 


தேடுதல் பணிகள் தீவிர படுத்தப்பட்டன. மேலும் பழைய வழக்குகள் மற்றும் புதியதாக ஏதேனும் பிரச்சினைகள் ஏதும் உள்ளனவா? என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. 


இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கடத்தப்பட்டவர்களுக்கும், இந்த ஆய்வாளர்க்கும் ஏதேனும் சம்பந்தம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. 


அதன் அடிப்படையில் இவர்கள் அனைவரும் ஒருமிக்கும்படி ஏதேனும் குற்றம் நடந்துள்ளதா? என தீவிரமாக குற்றப்பத்திரிகைகளை தேடி கொண்டிருந்தனர். 


இந்நிலையில் பிரவீனை பார்க்க காவல் ஆய்வாளரின் மனைவி வந்திருந்தார். 


“எனது கணவனை விரைவாக கண்டுபிடித்து தர காவல்துறையால் முடியவில்லை, அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இவ்வழக்கை தீவிரமாக தேட எனக்கு உதவி செய்யுங்கள்” என கேட்டு வந்திருந்தார்.


பிரவீன அதற்கு “நிச்சயமாக உதவி செய்கிறேன்” எனக கூறி காவல் நிலையம் சென்று ஆய்வாளர் கடைசியாக விடுமுறைக்கு எப்போது சென்றார்? அவர் காணவில்லை என காவல்துறைக்கு எப்போது தெரிந்தது? என்ற விவரங்களை சேகரிக்க காவல் நிலையம் வந்த பொழுது கர்ணன் நிலையத்தில் இல்லை. 


அங்கிருந்த காவலரிடம் தகவலை கூறி விவரங்களை சேகரித்தான். இருப்பினும் அங்கே இருந்த காவலர்கள் அனைவரும் பிரவீனுக்கு நன்றாக பழக்கமானவர்கள்  என்பதால் சகஜமாகவே பேசினார்கள். 


“உனது அண்ணனுக்கு திருமணம் என்பதால் விடுமுறையில் செல்ல அனுமதி வந்திருப்பதாகவும், 30 நாட்கள் விடுமுறை” எனவும் கூறினார். 


பிரவீன் அவர்களிடம் “கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான அனைத்து வழக்குகளையும் பற்றி தகவல்களை கூற முடியுமா?” என கேட்டான். 


அதற்கு காவலர் அதற்கான தகவல் அனைத்தையும் உனக்கு நான் தருகிறேன் என்று கூறி அதற்கான நகல்கள் அனைத்தையும் கொடுத்தார். 


பிரவீன் அனைத்தையும் அலுவலகத்திற்கு கொண்டு சென்று படித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 


ஒரு மாதம் கடந்தது. நீதிபதி இந்த வழக்கை சிறப்பு ஆய்வாளர் ஒருவர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 


அதன்படி விசாரணை தொடங்கியது. கர்ணனுக்கு திருமணம் என்பதால் விடுமுறையில் செல்ல தயாரானான். 


திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பாக நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. சிறு தொலைவில் உள்ள நகர்ப்புற பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணமும் நிச்சயதார்த்தமும் நடைபெற உள்ளது. 


மண்டபத்தை மூன்று நாட்கள் இரு வீட்டார்களும் சேர்ந்து வாடகைக்கு எடுத்து வேலைகளை துவங்கி இருந்தார்கள். 

           

நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக தனது நேர்த்திக் கடன முடிந்து விடும் என இளங்கோ கூறியிருந்தார். 


அதேபோல் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாக தெரு நாய்களுக்கு உணவளித்து நேர்த்திக் கடனை முடித்துக் கொண்டார் இளங்கோ. 


திருமணம் முடிந்து, அடுத்த நாள் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை பிரவீன் பார்த்துக் கொண்டிருந்தான். 


நல்லபடியாக நிச்சயதார்த்தமும் முடிந்தது. அன்று இரவு மண்டபத்திலேயே இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைவரும் அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு மேஜைகளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 


இளங்கோ மற்றும் அவரது மனைவி, பிரவீன் மூவரும் ஒன்றாக உணவருந்த வந்தனர். 


தங்களுக்கான உணவை எடுத்துக் கொண்ட இளங்கோ சாப்பிட அமர, மஞ்சுளாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். 


அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். 


கர்ணன் ஏதோ சஞ்சலத்துடன் இருப்பதாக மஞ்சுளாவுக்கு தோன்றியதால் “ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டாள்.

 

கர்ணன், “நான் விடுமுறையில் வந்து விட்டாலும் நிலையத்தில் உள்ள பிரச்சனையை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தத் தொடர் சம்பவங்கள் தான் பெரிய பிரச்சினையாக வரும் என நினைக்கிறேன். 


மஞ்சுளா அதற்கு “உங்களது வழக்குகளை நீங்கள் வீட்டில் அடிக்கடி கலந்த ஆலோசிப்பதாக கூறுவீர்கள். இப்போது ஏன் அவ்வாறு செய்வதில்லை” என கேட்டால். 


“அதற்கான நேரம் பொதுவாக கிடைப்பதில்லை. அதனால் தான்” என பிரவீன் கூறினான். 


மேலும் “இந்த வழக்கை நானும் சற்று கவனித்தேன். அதில் சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை. அதனால்…” இங்கே பேசலாமா என தயங்கியவரே பாதியில் நிறுத்தி தமையனை அவன் பார்த்திட,


தராலமாக பேசலாம் என்ற அண்ணனின் அனுமதி பார்வையில்,


தன் சந்தேகங்களை முன் வைத்தான் பிரவீன்.


கர்ணனிடம் “ஒவ்வொன்றாக நீ உனக்கு தெரிந்ததை கூறு. எப்போதும் போல்  தந்தைக்கு தெரிந்ததை தெளிவாக நமக்கு விளக்குவார். நாம் கலந்து ஆலோசிக்கலாம்” என பிரவீன் கூற,


“இந்த பிரச்சனை 11 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இருவர் காரில் இருந்து கடத்தப்பட்டனர். அதுதான் முதல் சம்பவமாக இருந்தது” என்றான் கர்ணன். 


பிரவீன அதற்கு “அதுதான் முதல் சம்பவமாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை” என்ற பிரவீன், 


“முன்னாள் அரசு வழக்கறிஞர் நினைவில் உள்ளாரா உனக்கு? என்று கேட்ட பிரவீன், 


“அவர் இப்போது உயிருடன் இல்லை” என்றான்.

 

“என்ன? அவருக்கு என்னாச்சி? அவரை யாராவது கொலை செய்துவிட்டாரா?” என பதட்டத்துடன் கேட்டான் கர்ணன்.


பிரவீன் “இல்லை. அவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக அவரது மகள் கூறினார். அவர் நோய்வாய்ப்பட முழு காரணம் அவர் சர்க்கரை நோயாளி என தெரிந்தே அவரது கால் பாதங்களை குற்றவாளி சிதைத்துள்ளான். அதனால் புண் சரியாகாமல் நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு காலை மருத்துவர்கள் துண்டித்து, மனவேதனையில் .இருந்தார் என அவரது மகள் கூறினாள். அவன் அனைவரையும் கொள்வதில்லை உதாரணத்திற்கு இரண்டு பெண்களை கை மற்றும் கால்களை தான் வெட்டியுள்ளான்.” என்று சொல்ல,


“அப்படி என்றால் வேறு சிலரை  கொலை செய்துள்ளானே! மேலும்  சில பேரை கடத்திச் சென்றுள்ளான். சில பேருக்கு தண்டனை மட்டும் வழங்கி உள்ளான்.” என்று கர்ணன் தம்பிக்கு எடுத்து கொடுத்தான்.


“சரி தான். அந்த கோணத்தில் பார்த்தால், முதல் சம்பவம் 12 மாதங்களுக்கு முன்பாகவே நடந்துள்ளது. அடுத்து இரண்டு நபர்கள் காரில் இருந்து கடத்தப்பட்டனர். பின் அவரது சடலங்கள் கிடைத்தது. பிரேத பரிசோதனைபடி இருவரும் ஒரே சமயத்தில் இறக்கவில்லை. 20 முதல் 30 நாட்கள் இடைவெளியில் தான் இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இப்படி பார்த்தால், மூன்று மாதங்கள், மூன்று ஆட்கள். இந்த வரிசையில் பார்த்தால் மாதம் ஒருவர். இந்த வழக்கில் உனக்கு எந்த தடைகளும் கிடைக்கவில்லை. காரணம் அந்த சமயத்தில் அங்கு பெய்த மழை. அடுத்த வழக்கு? என்று பிரவீன் கேட்க,


“ஒரு பெண்ணின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு சாலையின் ஓரமாக கிடந்தாள். மேலும் இச்சம்பவத்தை செய்தவர் ஒரு மாற்றுத் திறனாளியாக இருக்கலாம் என ஐயம் உள்ளது” என்றான் கர்ணன். 


பிரவீன் அதற்கு “இந்த வழக்கில் இந்த இரு கடத்தல் சம்பவங்களும் அடுத்தடுத்த மாதங்கள் எனக் கொண்டால், இது நான்காவது மாதம் நடந்த சம்பவம் அல்லவா! அப்படி என்றால் மாதம் சரியாக வருகிறது. அந்த குற்றவாளி மாற்றுத் திறனாளியாக இருக்க வாய்ப்புள்ளதாக முதல் நான்கு சம்பவங்களையும் பார்க்கும் பொழுது தடையங்கள் கிடைத்துள்ளது. 


காரில் இருந்து கடத்தப்பட்டவர்கள் மது போதையில் இருந்ததால் அவர்களை தூக்கிச் செல்ல மாற்றுத்திறனாளி அதிகமாக கஷ்டப்பட்டு இருப்பார். மேலும் ஜெயந்தி விஷயத்திலும் அது போன்று தான் நடந்தது. 


இப்போதைக்கு அவர் ஒரு மாற்றுத் திறனாளி என எடுத்துக் கொள்வோம். மற்றொரு பெண்ணும் அது போல் பாதிக்கப்படும் பொழுது அந்தப் பெண் ரேகா கூறியது என்னவென்றால், அவளை மயக்க நிலைமைக்கு தள்ளியது ஒரு போதை பொருளாக இருக்கலாம் என்பது தான். 


அந்த பொருள் காய்ந்த இலை போல வாசனை வந்ததாக கூறியிருந்தால். இதை பயன்படுத்த நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் அவர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அவர் கூறியது இவர் மாற்று திறனாளியாக இருக்க வாய்ப்பில்லை என. 


இதை வைத்து பார்க்கும் பொழுது ஒருவேளை குற்றவாளிக்கு அந்த நான்கு மாதங்கள் மட்டும் அல்லது அதற்கு முன்பாக கால்களில் ஏற்பட்ட தற்காலிக உடல் குறைபாடாக இருக்கலாம் என எண்ணுகிறேன்” என்றான் பிரவீன். 


அதன் பிறகு ரேகாவின் கணவர் மற்றும் தந்தை என அடுத்தடுத்து காணாமல் சென்றனர் கடைசியாக உங்களது காவல்துறையை சேர்ந்தவர் என முதல் சம்பவத்திலிருந்து இப்போது வரை 12 மாதங்கள் நடந்துள்ளன. 


சரியாக சொல்லப்போனால் 12 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் நமக்கு தெரிந்தவை எட்டு சம்பவங்கள் மட்டுமே. அதை வைத்து பார்க்கும் பொழுது இன்னும் பதிவாகாமல் நான்கு சம்பவங்கள் இருக்கின்றன அல்லது வேறு ஏதேனும் நிலையத்தில் பதிவாகி இருக்கலாம்.” என்று பிரவீன் தான் சேகரித்த தகவல்களை கொண்டு ஒரு யோகத்தை முன் வைத்தான்.


கர்ணனும் “நானும் இதைத்தான் யோசித்தேன். இருப்பினும் அவ்வாறு நடந்திருக்குமா? என ஐயமும் உள்ளது” என்றான். 


கர்ணன் “இவன் நிச்சயமாக மிகப்பெரிய பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும். அதனால் தான் இவ்வாறு செய்கிறான்” என நினைக்கிறேன் என்று சொல்ல,


பிரவீன் அதற்கு “அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. இவைகள் அனைத்தும் நன்றாக திட்டமிடப்பட்டவை. மயக்க மருந்துகள் எதுவும் இல்லாமல் எப்படி மயங்கச் செய்வது. மேலும் ஒருவரின் உடலை எவ்வாறு இரண்டாக ஒரே வீட்டில் வெட்டுவது என பல விதங்களில் யோசனை நமக்கு இருக்கிறது.” என்று பிரவீன் சொல்ல,


“காணாமல் போனவர்கள் என்ன நிலைமையில் உள்ளார்கள் என தெரியவில்லையே?” என கர்ணன் கவலையாக சொன்னான்.

     

பிரவீன அதற்கு “எனக்குத் தெரிந்தவரை அவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை” என்றிட, 


கர்ணன் அதற்கு “அப்படி ஏதேனும் அவர்களுக்கும் நடந்திருந்தால் அவர்களின் உடல்கள் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். இதுவரை நான் பார்த்த சம்பவங்கள் அனைத்தும் குற்றவாளி எதையும் முழுமையாக மறைக்கவில்லை. நாம் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே விட்டு சென்றுள்ளான். அதை வைத்து பார்க்கும் போது மீதி உடல்கள் கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் அல்லது அவன் இன்னும் அவர்களை உயிருடன் வைத்திருக்க வேண்டும்” எனக் கூறினான். 


பிரவீன் அதற்கு “அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் அவர்களின் உடல்கள் நிச்சயமாக கிடைக்கும் என சொல்லவும் முடியாது” என்று சொல்லிட,


“ஏன் அவ்வாறு கூறுகிறாய்?” என்று கேட்ட கர்ணன், 


“இந்த பெண்மணிகள் முன்னாள் வழக்கறிஞர் போன்றவர்களை அவன் கொலை செய்யவில்லை அவர்களை காயப்படுத்தி விட்டு மற்றவர் பார்வையிலே விட்டு சென்றுள்ளான். அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தானே தவிர அவர்களை கொல்ல அல்ல. மேலும் இருவரின் உடல்களை கண்டுபிடிப்பார்கள் என தெரிந்தும் மக்கள் நடமாட்டம் உள்ள முள் புதர்களுக்கு இடையில் விட்டுச் சென்றுள்ளான். இதை வைத்து அவர் என்ன கூறு வருகிறார்” எனக் கேட்டான்.


“அவைகள் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை அதை ஏதாவது ஒரு சூழ்நிலையில் விவசாயிகளோ அல்லது பஞ்சாயத்தில் இருந்தோ என்றாவது ஒரு நாள் அவைகளை சுத்தம் செய்வார்கள் என அவன் நன்றாக அறிந்திருக்க வேண்டும். 


மேலும் சில உடல்கள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை அவன் நம் தந்தை நாய்களுக்கு உணவளிப்பது போல்,  மனித உடலையும் வெட்டி ஆட்டு கறியுடன் சேர்த்து நாய்களுக்கு போட்டிருக்கலாம்” என்று பிரவீன் இளங்கோ வை பார்த்துக் கொண்டே சொல்ல,


அத்தனை நேரம் சாப்பாட்டில் கவனமாக இருப்பது போல் காட்டிக் கொண்ட அவரும் ஒருமுறை தலையை தூக்கி மகனை பார்த்தாரே தவிர வேறெதுவும் சொல்லவில்லை.


அவரிடம் இருந்து பார்வையை திருப்பி மேலும் தொடர்ந்த பிரவீன், “இல்லையேல் பாழடைந்த கிணற்றில் மீன்களுக்கு இரையாக கூட போட்டு இருக்கலாம்” எனக் கூறினான். 


கர்ணன் அதற்கு “நாங்கள்  அந்த கிணற்றில் சோதனை நடத்தினோம். அதில் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அதில் எவ்வித துர்நாற்றங்களும் வீசவில்லை. அதனால் அங்கு நீ சொல்வது போல் உடல்களை வீசி செல்ல வாய்ப்பில்லை. 


மேலும் எனது விடுமுறை முடித்தவுடன் நான் இதை  நிச்சயமாக கண்டுபிடிப்பேன்” என நம்பிக்கை தாண்டி தனக்கு சவாலாக அமைந்த இந்த வழக்கை முடித்தே தீருவேன் என்ற வெறியில் கூறினான்.  


அப்பொழுது குறிக்கீட்ட பிரவீன் “இந்த வழக்கில் நீ குற்றவாளியை கண்டுபிடித்தாலும், என்னைப் போன்ற ஒரு வழக்கறிஞரிடம் இந்த வழக்கு வந்தால், மிக எளிமையாக அவரைக் காப்பாற்றி விடுவேன் என்பதை நினைவில் கொள்” என்றான். 




திருமண ஏற்பாடுகள் அவசரகதியாக நடந்துக் கொண்டிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாள், 


வழக்கம் போல் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது லட்சுமி அவ்விடம் விட்டு செல்ல, பிரவினும் தாயைக் காண பின் தொடர்ந்து சென்றான்.  


மாடி படிக்கட்டில் அமர்ந்திருந்த லட்சுமியிடம் வந்த பிரவீன்,


“அம்மா உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றவன் ஒருவிதமான வலியும், வெறுப்பும் இழையோடிட,


பதட்டம் ஏதுமின்றி “சொல்லு ப்பா” என்றார் லட்சுமி.


“அப்பா பத்து மாதங்கள் மட்டுமே கறிக் கடைக்காரரிடம் கறி வாங்கியுள்ளார். ஆனால் 12 மாதங்கள் தெரு நாய்களுக்கு உணவளித்துள்ளார்” என்று குழப்பமும் குற்றம் சாட்டும் பார்வையும் பார்த்தவன் தான் ஆராய்ந்து கண்டுபிடித்ததை அவரிடம் சொன்னான்.


“அப்பா போல ஒருவரால் ஒரு மனிதனை சிறு சிறு துண்டுகளாக வெட்ட முடியும் என எனக்கு தெரியும். அதை அனைவராலும் செய்ய முடியாது. இறக்க குணமும், பயமும் உள்ள எந்த ஒரு மனிதனாலும் பிற மனிதனை சிறு சிறு துண்டுகளாக வெட்ட இயலாது. 


ஆனால் அப்பா அவ்வாறு அல்ல. இறந்தவர்களின் உடல்களை அவை அழகிய நிலையிலோ, விபத்து பகுதிகளில் எவ்வளவு சேதமாக இருந்தாலும் சிறு தயக்கம் இன்றி உடல்களை மீட்டு உள்ளார். 


மேலும் கட்டிட இடுபாடுகளில் ஐந்து நாட்கள், ஆறு நாட்கள் ஆன உடல்களை கூட சிறு சிறு துண்டுகளாக மீட்டு உள்ளார். சாதாரண மனிதர்களால் பார்த்தால் வாந்தி வரும் நிலைமையில் உள்ள உடல்களை கூட அவர் மீட்டு உள்ளார் என நான் அறிவேன். 


மேலும் முதலுதவி செய்து தனியாளாக ஒரு மனிதனை கிணற்றிலிருந்து மேலே தூக்கும் அளவுக்கு பலசாலியும் கூட.


தந்தையால் மாற்றுத் திறனாளி போல் வலது மற்றும் இடது கால்களை நோய்வாய்ப்படும் சில நாட்களுக்கு நடக்கவும் முடியும் என்பதை நான் அறிவேன். 


மேலும் சிலவற்றை என்ன செய்தார் என என்னால் அறிய முடியவில்லை என்றான் பிரவீன். 


மேலும் பிரவீன், “நாளை மறுநாள் அசைவிருந்துக்காக கறிக்கடைக்காரரை பார்த்த போது தான் இது எனக்கு தெரிந்தது எனக் கூறினான். 


அதைக் கேட்ட அவள் சிறிது சிரிப்புடன் “எனது விருப்பத்தின் பேரில்தானே வழக்கறிஞர் படித்தாய் அப்படித்தானே!” என்று கேட்க பிரவீனுக்கு சற்று அதிர்ச்சி. 


அப்படியானால் இவைகள் அனைத்தும் அம்மாவுக்கு முன்னாடியே தெரியுமா? என. 


லட்சுமி அதற்கு “எனக்கு வெளிஉலகம் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் எனது கணவரை நன்றாக தெரியும். இவைகள் என்றாவது ஒருநாள் நடக்கும் என எதிர்பார்த்தேன். அவைகள் இப்போது நடந்தன. என்னால் எதையும் தடுக்க முடியாது. தடுக்கவும் விரும்பவில்லை” என்றார்.


“தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை அல்ல. ஏனென்றால் சில இடங்களில் அவை பிணம் தின்னி மீன்கள் என்று கூட பெயர்கள் உண்டு. தெரியாமல் ஒருவர் அதில் விழுந்து இறந்து விட்டால் அவர்களின் உடல்களை மீன்கள் ஒரே நாளில் கூட தின்று தீர்ந்து விடுவதாக கேள்விப்பட்டேன். 


அதனால் அவ்வகை மீன்களை எப்போதும் உண்ணாதே பிரவீன்” என மறைமுகமாக சில உண்மைகளை கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். 


அடுத்த நாள் திருமணம் முடிந்து மணமக்கள் இருவரும் தாய் மற்றும் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.


அப்போது இளங்கோ “எனது கடமைகள் முடிந்து விட்டன. இனிமேல் நீதான் உனது கடமையை சரியாக செய்ய வேண்டும்” என கூறினார். 


கர்ணன் அதற்கு “உண்மைதான் அப்பா. உங்களது பணி முடிந்து விட்டது. இப்பொழுது தான் எனது பணிய ஆரம்பிப்பதாக நான் நினைக்கிறேன். நிச்சயம் எனது பணியை நான் சிறப்பாக செய்வேன். என இருவரும் கூறி மாறி மாறி பார்த்துக் கொண்டனர். (தொடரும்)

        


Comments

Popular posts from this blog

அதிரல் தாங்கும் பாதிரி எக்ஸட்ரா